லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் வழங்கப்படமாட்டாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. “புல்வாமா தாக்குதலுக்கு பிறகே, இந்த நோட்டீஸை தாங்கள் வைத்துள்ளோம், பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இங்கு வரக் கூடாது; அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அறைகளை நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம்” என்று அந்த ஹோட்டலின் மேலாளர் தெரிவித்துள்ளார். மோடியின் வெறுப்புப் பிரச்சாரம் ஒருபகுதியாகவே இந்த நோட்டீஸ் அமைந்துள்ளது.